தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு


தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு


தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – நாளை சிறப்பு முகாம்!

சென்னையில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கார்டுகளில் திருத்தங்களை செய்வதற்கு எதுவாக நாளை (மே.15) சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ரேஷன் அட்டைகள்

மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் ரேஷன் அட்டைகள் மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இந்த ரேஷன் அட்டைகள் மானிய விலையில் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் ஒரு அடையாள ஆவணமாகவும், அரசு தரும் சில இலவச சேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து வகையான அரசின் சேவைகளும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றங்களை செய்வது என பலவும் ஆன்லைன் மூலமே எளிதாக்கப்பட்டு இருக்கிறது. அதே போல ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது குறித்த புகார்களும் இப்போது தொலைபேசி அல்லது ஆன்லைன் மூலமாக தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், ரேஷன் கார்டில் மாற்றம் அல்லது திருத்தம் செய்வதற்காக அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதாவது, ரேஷன் கார்டுகளில் மாற்றங்களை செய்ய விரும்புவர்கள் நாளை (மே.15) நடைபெற இருக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அதன்படி, காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொண்டு ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கார்டுகளில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

2 நாள் பயணமாக இன்று தஞ்சை வரும் சசிகலா வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டம்?: பரபரப்பு தகவல்கள்

11 Recipes to Cook for Dad on Father s Day #Cook

18 Foods to Beautify You Skincare Nutrition Tips #Nutrition